லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான சோளா பூரி

Published On 2017-03-03 07:43 GMT   |   Update On 2017-03-03 07:43 GMT
குழந்தைகளுக்கு சோளா பூரி மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சோளா பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 கப்
தயிர் - 2 ஸ்பூன்
ஆப்பசோடா - ஒரு பின்ஞ்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை தேக்கரண்டி



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், ஆப்பசோடா, தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

* பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.

* தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.

* சுவையான சோளா பூரி தயார்.

* இதற்கு தொட்டு கொள்ள சென்னா மசாலா சூப்பராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News