லைஃப்ஸ்டைல்

செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல்

Published On 2017-02-08 09:54 GMT   |   Update On 2017-02-08 09:54 GMT
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை பட்டாணி - 1 கப்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - ருசிக்கு
தனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1/4 ஸ்பூன்
உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்

செய்முறை  :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

* அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

*  செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News