லைஃப்ஸ்டைல்

சூப்பரான காடை முட்டை குழம்பு

Published On 2017-02-03 07:30 GMT   |   Update On 2017-02-03 07:30 GMT
காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காடை முட்டை - 20
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 (விழுதாக அரைத்தது)
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
நீர் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

செய்முறை :

* தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

* மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

* அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* காடை முட்டை குழம்பு ரெடி!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News