லைஃப்ஸ்டைல்

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

Published On 2017-01-26 09:51 GMT   |   Update On 2017-01-26 09:51 GMT
கோவக்காய் சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் நல்லது. இன்று கோவக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
இடித்த பூண்டு - நான்கு பல்
பெருங்காயம் - சிறிதளவு
கோவக்காய் -300 கிராம்

பவுடர் செய்ய :

கடலை பருப்பு - மூன்று டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - மூன்று டீஸ்பூன்
சீரகம் - இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - நான்கு

செய்முறை :

* கோவக்காயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கோவக்காய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

* கோவக்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு அரைத்த பொடி சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா ரெடி.

* இந்த செட்டிநாடு கோவக்காய் மசாலா தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News