லைஃப்ஸ்டைல்

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

Published On 2017-01-21 09:49 GMT   |   Update On 2017-01-21 09:49 GMT
வீட்டிலேயே விருப்பமான பழங்களை வைத்து ஜாம் செய்து சாப்பிடலாம். இப்போது எளிய முறையில் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - 5
பப்பாளி - 1
திராட்சை - 1 கிலோ (விதை இல்லாத திராட்சை)
வாழைப்பழம் - 3
ஸ்ட்ராபெர்ரி - 8
அன்னாசி - 1 (சிறியது)
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் - 6-7 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கிலோ
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* அன்னாசி மற்றும் பப்பாளியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* ஆப்பிளை தோல் சீவாமல் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய அன்னாசி, பப்பாளி மற்றும் ஆப்பிள் பழங்களைப் போட்டு, 10 நிமிடம் வேக வைத்து, இறக்க வேண்டும். அதன் பின்பு ஆப்பிளின் தோலை நீக்கிவிடவும்.

* மிக்ஸி/பிளெண்டரில் திராட்சை, எலுமிச்சை சாறு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் மற்றும் அன்னாசி சேர்த்து நன்கு கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடிகனமான வாய் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கூழ், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து, கெட்டியானதும் இறக்க வேண்டும்.

* அப்போது கலவையானது நீர்மமாக இல்லாமல் கெட்டியாக இருந்தால், ஜாம் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.

* பின்னர் அதனை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்க வேண்டும்.

* இப்போது சுவையான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் ரெடி!!!

* விதை இல்லாத திராட்டை கிடைக்காவிட்டால் திராட்சையில் உள்ள விதைகளை எடுத்து விட்டும் செய்யலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News