லைஃப்ஸ்டைல்

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

Published On 2017-01-18 09:17 GMT   |   Update On 2017-01-18 09:17 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை உப்புமா செய்து கொடுக்கலாம். இப்போது பிரட் முட்டை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிரட் - 5 துண்டுகள்
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிப்பதற்கு…

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத் தூள் - சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* முட்டை உதிரியாக வந்ததும் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கிளறவும்.

* நன்றாக உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான பிரட் முட்டை உப்புமா ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News