லைஃப்ஸ்டைல்

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

Published On 2017-01-11 09:56 GMT   |   Update On 2017-01-11 09:56 GMT
இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கல்கண்டு - 400 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10௦
திராட்சை - 10௦
நெய் - 200 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை :


* கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

* இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

* பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

* கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News