லைஃப்ஸ்டைல்

சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி

Published On 2016-12-09 05:39 GMT   |   Update On 2016-12-09 05:39 GMT
முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி வடை போல் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - கால் கப்
உளுந்து - அரை கப்
ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

* முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

* இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News