லைஃப்ஸ்டைல்

மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி

Published On 2016-11-25 04:19 GMT   |   Update On 2016-11-25 04:19 GMT
இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
 
மீல் மேக்கர் - 1 கப்
பட்டாணி - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள்  - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - 3/4 ஸ்பூன்  
எண்ணெய் - 4 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
 
* மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
 
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News