லைஃப்ஸ்டைல்

தித்திப்பான அரிசி பாயாசம் செய்வது எப்படி

Published On 2016-11-18 08:57 GMT   |   Update On 2016-11-18 08:57 GMT
ஜவ்வரிசி பாயாசத்தை விட அரிசி பாயாசம் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - அரை கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
திராட்சை - தேவைக்கு

செய்முறை :

* அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

* வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.  

* பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.  

* பாயாசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும்.  

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரி, திராட்சையை போட்டு சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* தித்திப்பான அரிசி பாயாசம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News