பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா

Published On 2016-11-12 09:58 IST   |   Update On 2016-11-12 09:58:00 IST
குழந்தைகளுக்கு கேரமல் பிரை பனானா மிகவும் பிடிக்கும். இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்  :

மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க


 
செய்முறை :

* மைதாவுடன், சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

* வாழைப்பழங்களை தோல் நீக்கி விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இவ்வாறு கேரமல் தயார் செய்து கொள்ளவும்.

* பொரித்தெடுத்த பழத்துண்டுகளை கேரமல் கலவையில் போட்டெடுத்து, பரிமாறவும்.

* விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News