பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

Published On 2016-11-11 14:23 IST   |   Update On 2016-11-11 14:23:00 IST
மாலை நேரத்தில் இந்த தேங்காய் பால் பணியாரம் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
தேங்காய் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய் - 1 சிட்டிகை
சர்க்கரை - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க



செய்முறை :

* உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும்.

* அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..

* பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

* தித்திப்பான தேங்காய் பால் பணியாரம் ரெடி."

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News