பெண்கள் உலகம்
உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்வது எப்படி
மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மீன் - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 10 பல்
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 8
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
புளி - எலுமிச்சைபழம் அளவு
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும்.
* உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
* பிறகு புளிக் கரைசலை (குழம்புக்கு தேவையான தண்ணீரை புளித்தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும் ) ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* உருளைக்கிழங்கு வெந்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் மீனை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீன் - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 10 பல்
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 8
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
புளி - எலுமிச்சைபழம் அளவு
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும்.
* உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
* பிறகு புளிக் கரைசலை (குழம்புக்கு தேவையான தண்ணீரை புளித்தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும் ) ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* உருளைக்கிழங்கு வெந்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் மீனை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.