பெண்கள் உலகம்
சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப்
உருளைக்கிழங்கு மட்டன் கைமாவை வைத்து எப்படி சூப்பரான கபாப் செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கைமா - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரட் துண்டு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - 2 கப்
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* மட்டன் கைமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
*பின்பு பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கைமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கைமாவை வைத்து மூடி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் கைமா - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரட் துண்டு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - 2 கப்
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* மட்டன் கைமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
*பின்பு பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கைமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கைமாவை வைத்து மூடி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.