பெண்கள் உலகம்
தோசை, சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை பணியாரம் செய்ய :
முட்டை - 4,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 2 சிறியது,
உ.கடலை - 2 மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
குருமாவிற்கு :
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
தேங்காய் - 1 சிறியது,
ப.மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
பூண்டு - 7 பல்,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்.
முட்டை பணியாரம் செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உடைத்த கடலையை பொடித்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், பொடித்த உடைத்த கடலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
குருமா செய்யும் முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
* வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* குருமாவில் பச்சை வாசனை போனவுடன் கடைசியாக முட்டை பணியாரத்தை சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும்.
* இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை பணியாரம் செய்ய :
முட்டை - 4,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 2 சிறியது,
உ.கடலை - 2 மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
குருமாவிற்கு :
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
தேங்காய் - 1 சிறியது,
ப.மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
பூண்டு - 7 பல்,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்.
முட்டை பணியாரம் செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உடைத்த கடலையை பொடித்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், பொடித்த உடைத்த கடலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
குருமா செய்யும் முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
* வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* குருமாவில் பச்சை வாசனை போனவுடன் கடைசியாக முட்டை பணியாரத்தை சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும்.
* இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.