லைஃப்ஸ்டைல்

செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை

Published On 2016-10-22 09:02 GMT   |   Update On 2016-10-22 09:02 GMT
பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்துமிக்கது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பாசிப்பருப்பு நெய் உருண்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

பாசிப் பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்

செய்முறை  :

* ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.

* முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

* பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.

* அரைத்த மாவை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

* மிக்சியில் சர்க்கரையை போட்டு அரைத்து அதையும் மாவில் கலக்கவும்.

* ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

* வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற விடவும்.

* ஆறியதும் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

* சுவையான சத்தான இனிப்பு இது.

* செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News