லைஃப்ஸ்டைல்

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

Published On 2016-10-20 02:38 GMT   |   Update On 2016-10-20 02:38 GMT
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பால்கோவா உருண்டை செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)
கோவா-100 கிராம்
சர்க்கரை- ½ கப்
தேங்காய் துருவல்-¼ கப்
வெனிலா எசன்ஸ்-½ கப்

செய்முறை :

* தேங்காய் துருவலை லேசாக வெறும் வாணலியில் சூடு செய்துக் கொள்ள வேண்டும்.

* பன்னீரை மிக்சியில் போட்டு பொடித்துக் (துருவியது போல்) கொள்ள வேண்டும்.

* சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

* ஒரே பாத்திரத்தில் தேங்காய் துருவல், பன்னீர் துருவல், கோவா, சர்க்கரை தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் எல்லாவற்றையும் போட்டு கைப்படாமல் கரண்டியால் நன்கு அழுத்தி கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு கைகளில் லேசாக நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்க வேண்டும்.

* சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை ரெடி.

* குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News