பெண்கள் உலகம்
சூப்பரான கிராமத்து மீன் குழம்பு
வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. இப்போது கிராமத்து ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
நல்லெண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் - 10
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 8-10
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைத்து சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
* பின் அதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடம் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
நல்லெண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் - 10
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 8-10
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைத்து சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
* பின் அதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடம் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.