லைஃப்ஸ்டைல்

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

Published On 2016-09-16 04:11 GMT   |   Update On 2016-09-16 04:11 GMT
மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். 

* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* குக்கரில் வெங்காயம் போட்டு வதக்கிய பின்னர், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் ஆட்டுக்காலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில் போட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி 10 நிமிடன் கொதிக்கவிட்டு இறக்கவும். 

* பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

* இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News