லைஃப்ஸ்டைல்
செட்டிநாட்டு மீன் குழம்பு

சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு

Published On 2016-04-19 07:07 GMT   |   Update On 2016-04-19 07:07 GMT
சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயாரிக்கும் முறை எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மீன்   -  1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பூண்டு(உரித்தது) - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் -  தேவைக்கேற்ப

தாளிக்க :

கடுகு,
கறிவேப்பிலை,
காய்ந்தமிளகாய்

அரைக்க :


தேங்காய்துருவல் – 1/2 மூடி

செய்முறை:

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.

* புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

* ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.

* தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

* அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும்.

* குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.

* 10 நிமிடம் மீன் வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.

Similar News