சமையல்

தொண்டைக்கு இதம் தரும் சுக்கு மல்லி காபி

Published On 2022-08-12 06:16 GMT   |   Update On 2022-08-12 06:16 GMT
  • இந்த காபி பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
  • சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் இந்த காபியை அருந்தலாம்.

தேவையான பொருட்கள் :

மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,

மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,

சுக்கு - ஒரு துண்டு,

கருப்பட்டி - தேவையான அளவு,

துளசி - கைப்பிடி.

செய்முறை :

துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.

இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.

பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.

Tags:    

Similar News