- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு அருமையான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
மாவிற்கு…
மைதா - அரை கப்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
ஓமம் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கு.
பூரணத்திற்கு…
உருளைக்கிழங்கு - 1,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
வெங்காயம் - 1,
கடலை மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லியுடன் சேர்த்து வதக்கி, அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3 பாகங்களாக கீறி விடவும்.
பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான ஆலு டோஃபி ரெடி.