தக்காளி, வெங்காயம் சேர்க்காத பூண்டுக்குழம்பு செய்யலாம் வாங்க...
- சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உரித்த பூண்டு - 1 கப்
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் - ¾ கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - ¼ டீஸ்பூன்
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
மிளகு - ¼ டீஸ்பூன்
சீரகம் - ¼ டீஸ்பூன்
அரைக்க:
பூண்டு - 4 பற்கள்
மிளகு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
செய்முறை:
* புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
* அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
* அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகத்தை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.
* பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
* கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
* இப்போது 'சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு' தயார்.
* இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health