சமையல்

சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி

Published On 2022-10-14 09:17 GMT   |   Update On 2022-10-14 09:17 GMT
  • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
  • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 20 பற்கள்

இஞ்சி - 1 இன்ச்

குண்டு வரமிளகாய் - 10

தக்காளி - 1

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை தட்டிக் கொள்ளவும்.

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.

மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!

Tags:    

Similar News