இனி ஆரஞ்சு பழத்தோலை தூக்கி எறிய வேண்டாம், மிட்டாய் செய்யலாம் வாங்க...!
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- ஆரஞ்சு மிட்டாயை செய்து தந்து பாராட்டினை பெறுங்கள்.
பொதுவாக பள்ளியில் இருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டும். மேலும் நாம் செய்து தரும் ஸ்நாக்ஸ் அவர்களுக்கு பிடித்த மாதிரியும் இருக்க வேண்டும் என்று சிந்தனை செய்பவரா நீங்கள் அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இனிப்பு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், அதுவும் ஆரஞ்சு சுவையுடன் வித்தியாசமான மிட்டாய் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் வீணாக தூக்கிப்போடும் ஆரஞ்சு பழதோலை பயன்படுத்தி மிட்டாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சமையல் குறிப்பினை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாயை செய்து தந்து பாராட்டினை பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழதோல் – 1 கைப்பிடி அளவு
நாட்டு சர்க்கரை – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி அளவு ஆரஞ்சு பழதோலினை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்துள்ள ஆரஞ்சு பழதோல்களை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள நாட்டு சர்க்கரையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இப்பொழுது அதனுடன் நாம் வேக வைத்து எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழதோல்களை சேர்த்து ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கலந்து விட வேண்டும்.
இறுதியாக அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூளினை சேர்த்து நன்கு கலந்து எடுத்து அதனை ஒரு தட்டில் வைத்து நன்கு ஆற விடவும். சுவையான ஆரஞ்சு கேண்டி தயார்.