சமையல்

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை சட்னி

Published On 2022-10-15 11:39 IST   |   Update On 2022-10-15 11:39:00 IST
  • கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது.
  • நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பில்லை - ஒரு கப்

உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

பச்சை மிளகாய் - இரண்டு

புளி - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.

பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி.

Tags:    

Similar News