சமையல்

மொறு மொறுப்பான முருங்கைக்கீரை பக்கோடா

Published On 2023-10-17 10:32 GMT   |   Update On 2023-10-17 10:32 GMT
  • நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
  • கீரைகளை குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

கீரையை பொரியல் செய்து கொடுத்தாலோ கடைந்து கொடுத்தாலோ குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி மொறு மொறுன்னு ஸ்நாக்ஸ் ஆக பக்கோடா செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை இப்படித்தான் சுவையான ஸ்னாக்ஸ் ஆக மாற்றி கொடுக்க வேண்டும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு- ஒரு கப்

அரிசி மாவு- அரை கப்

வெங்காயம்- 3 (நறுக்கியது)

முருங்கைக்கீரை- ஒரு கப்

எண்ணெய்-

உப்பு- தேவையான அளவு

சோம்பு- 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

பெருங்காயம்- 1/4 ஸ்பூன்

பச்சை மிளகாய்- 2 (நறுக்கியது)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முருங்கைக்கீரையை நன்றாக கழுவிவிட்டு அதனை பொடியாக வெட்டி சேர்க்க வேண்டும். அதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், சோம்பு, பச்சைமிளகாய் மற்றும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் சிறிது சிறிதாக போட்டு சிவக்க பொறித்து எடுக்க வேண்டும். சுவையான முருங்கைக்கீரை பக்கோடா தயார். ஈவ்னிங் காபி, டீயுடன் சூடாக பரிமாறலாம்.

Tags:    

Similar News