சமையல்
சாமை உப்புமா கொழுக்கட்டை

இரத்த சோகை வராமல் தடுக்கும் சாமை உப்புமா கொழுக்கட்டை

Published On 2022-05-19 05:13 GMT   |   Update On 2022-05-19 05:13 GMT
சாமை அரிசியில் உள்ள அதிகப்படியான கால்சியம் உள்ளது. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை.
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி மாவு - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.

இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.

பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம்.
Tags:    

Similar News