லைஃப்ஸ்டைல்
மாதுளை தோல் தேநீர்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்

Published On 2021-05-03 05:27 GMT   |   Update On 2021-05-03 05:27 GMT
மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

மாதுளை தோல் - 1 பழத்தினுடையது
ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையது
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் - 4-5  
தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்

செய்முறை

பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.

15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.

இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News