லைஃப்ஸ்டைல்
இலந்தை அடை

அடுப்பில்லா சமையல்: சத்தான இலந்தை அடை

Published On 2021-04-07 05:29 GMT   |   Update On 2021-04-07 05:29 GMT
இலந்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது. முதுகு வலி, ஆஸ்துமா, கண் பிரச்சனைகள் அகல, ரத்த அழுத்தத்தை குறைக்க, தலைவலி குணமாக என பல விதங்களிலும் இலந்தை உதவுகிறது. உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்

இலந்தை பழம் - 1 கப்
வெல்லம் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு

செய்முறை :

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

பிறகு இலந்தைபழம், பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காய விடவும்.

அடுத்த நாள் அற்புதான ருசியில் இலந்தை அடை தயார்.

கைகளால் உரலில் இடித்து செய்தால் கூடுதல் ருசி கொண்ட பதார்த்தமாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News