லைஃப்ஸ்டைல்
மரவள்ளிக்கிழங்கு அடை

சத்தான சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை

Published On 2020-04-08 05:30 GMT   |   Update On 2020-04-08 05:30 GMT
மரவள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மரவள்ளிக்கிழங்கில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ கிராம்
பச்சரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) -150 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 6 பல்
கொத்தமல்லித்தழை - ஒரு கப்
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை:

மரவள்ளிக்கிழங்கு தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும்.

பின்பு இதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி பின்பு எடுத்து நறுக்கிய கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசை தவாவில் எண்ணெய்விட்டு கொஞ்சம் மாவை கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

சூப்பரான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News