லைஃப்ஸ்டைல்

இரத்தசோகைக்கு உகந்த ராஜ்மா சூப்

Published On 2019-05-14 04:50 GMT   |   Update On 2019-05-14 04:50 GMT
இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மா அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 3 பல்,
பிரிஞ்சி இலை - 1,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.



செய்முறை :

ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.

அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.

விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.

சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News