லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடை

Published On 2018-08-09 04:31 GMT   |   Update On 2018-08-09 04:31 GMT
முருங்கை கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பருப்பு, முருங்கை கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முருங்கை கீரை - ஒரு கப்,
இட்லி அரிசி - ஒரு கப்,
வெங்காயம் - 1
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்,
உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 3,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



செய்முறை:

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடைரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News