லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்

Published On 2017-02-02 05:26 GMT   |   Update On 2017-02-02 05:26 GMT
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோள ரவையை வைத்து எப்படி சத்தான பொங்கல் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சோள ரவை - ஒரு கப்,
பாசிப் பருப்பு - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
மிளகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
நெய் - ஒரு மேஜைக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
ப.மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
முந்திரி - 6.

செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* பாசிப் பருப்பு, சோள ரவையை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

* குக்கரில் 3 கப் நீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.

* தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் ரவை, பருப்பு, உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் விட்டு சூடானதும் முந்திரி, சீரகம், மிளகு, ப.மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்த சோள ரவைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.

* சூப்பரான சோள ரவைப் பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News