லைஃப்ஸ்டைல்

சத்தான பட்டாணி கேரட் அடை

Published On 2017-01-27 03:31 GMT   |   Update On 2017-01-27 03:31 GMT
பட்டாணியில் புரோட்டீன் சத்தும், கேரட்டில் ‘விட்டமின் ஏ’ சத்தும் அதிகமுள்ளது. இவை இரண்டையும் வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பட்டாணி - கால் கிலோ,
கேரட் - 100 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி - அரை கட்டு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் துருவிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை அடைகளாக தட்டி போட்டு, சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

* சத்தான சுவையான பட்டாணி கேரட் அடை ரெடி.

குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News