லைஃப்ஸ்டைல்

சத்தான சிவப்பரிசி - கேரட் புட்டு

Published On 2016-10-08 03:15 GMT   |   Update On 2016-10-08 03:15 GMT
சிவப்பரிசி, கேரட் இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரண்டையும் சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வறுத்த சிவப்பரிசி மாவு - 2 கப்
கேரட் துருவல் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய (முட்டைகோஸ்) - 1/4 கப்
தேங்காய்துருவல் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், முட்டைகோஸை சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.

* மற்றொரு பாத்திரத்தில் வறுத்த அரிசிமாவை போட்டு சிறிது உப்பு போட்டு கலந்து சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். மாவு கையால் பிடித்தால் உதிராமல் நிற்கக் கூடிய பதத்திற்கு வரும் வரை கிளறவும்.

* பின்னர் அதை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஒரு சிறிய டம்ளரினால் கொத்தி விடவும்.

* அதன் பிறகு இந்த மாவுடன் தேங்காய் துருவல், கேரட் கலவையை சேர்த்து கலக்கவும்.

* புட்டு குழலில் இந்த மாவை போட்டு ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

* சுவையான சிவப்பரிசி - கேரட் புட்டு தயார்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News