லைஃப்ஸ்டைல்

நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்

Published On 2016-10-07 03:47 GMT   |   Update On 2016-10-07 03:47 GMT
நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் படைத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் மலர வேக விடவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

* இத்துடன் நெய், வேகவைத்த பயறு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

* ஒருவேளை செய்யும் போது பாகு நீர்த்துப்போவது போல இருந்தால் தீயை அதிகமாக்கி சிறிது நேரம் வேகவைத்தால் போதும்.

குறிப்பு: முளைகட்டிய பச்சைப்பயறையும் பயன்படுத்தலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News