லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கோதுமை உசிலி

Published On 2016-08-15 02:58 GMT   |   Update On 2016-08-15 02:58 GMT
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான சுவையான கோதுமை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்  
அரிசி மாவு - 3 டீஸ்பூன்  
முழு உளுந்து - அரை கப்  
கடலைப்பருப்பு - கால் கப்  
பச்சை மிளகாய் - 4  
கறிவேப்பிலை - சிறிது  
கடுகு - அரை டீஸ்பூன்  
பெருங்காயம் - சிறிதளவு  
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

*  உளுந்து மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேக வைக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, எடுக்கவும்.

* வாணலியில் கடுகு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த பருப்புக் கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் வதக்கி எடுத்தால், சுவையான கோதுமை உசிலி தயார்.

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஒரு சத்தான உணவு இது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News