லைஃப்ஸ்டைல்

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

Published On 2016-06-24 01:58 GMT   |   Update On 2016-06-24 01:58 GMT
குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இவ்வாறு கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

அரிசி - 250 கிராம்,
அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும்.

* கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

* அடுத்து அதில் வதக்கிய கீரை சேர்க்கவும்.

* ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

* தண்ணீர் நன்கு கொதித்த உடன் உடைத்த ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும்.

* வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

* இந்த அரிசி ரவை கீரை கொழுக்கட்டை மிகவும் சத்து நிறைந்தது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News