லைஃப்ஸ்டைல்

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சி

Published On 2016-06-09 05:42 GMT   |   Update On 2016-06-09 05:42 GMT
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி - கால் கப்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரை கப்,
மோர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
மாங்காய், கேரட் - தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவைக்கு.

செய்முறை:

* கேரட், மாங்காய், ப.மிளகாயை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வரகரிசியை சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும்.

* மோரை நன்றாக கடைந்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதம் உள்ள ஓமம் போட்டு தாளித்த பின், பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய், கேரட், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பாதி வேகும் வரை வதக்கிய பின் கடைந்து வைத்துள்ள மோரில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* வரகரிசியை வேகவைத்து இறக்கியவுடன் அதில் கலந்து வைத்துள்ள மோர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கஞ்சியாகப் பருகலாம்.

பலன்கள் :

வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், கேரட், பெருங்காயம் போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News