பொது மருத்துவம்

கொட்டாவி விடும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்?

Published On 2023-10-27 06:58 GMT   |   Update On 2023-10-27 06:58 GMT
  • சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.
  • தொண்டைப் பகுதியோடு ‘யூஸ்டேசியன்’ குழல் இணைக்கப்பட்டுள்ளது.

மனிதனின் காது புறச்செவி, நடுச்செவி, உட்செவி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுச்செவியானது தொண்டைப் பகுதியோடு 'யூஸ்டேசியன்' என்ற குழல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மிக அவசியமானதாகும்.

நம் செவிப்பறையின் வெளிப்புறமும் உட்புறமும் ஒரே மாதிரியான அழுத்தம் இருக்க வேண்டும். இல்லையெனில் செவிப்பறை கிழிந்துவிடும். இந்த சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.

கொட்டாவி விடும்போது, அதிக அளவு காற்று தொண்டைப்பகுதிக்கு வந்து வெளியேறுகிறது. அப்போது யூஸ்டேசியன் குழலுக்குள்ளும் அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் தான் சில நொடிப்பொழுது காது அடைத்துக்கொள்கிறது.

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது அல்லது யாராவது கன்னத்தில் அறையும்போது, காது முறுக்கப்படும்போது டென்சர் டைம்பானி காதை பாதுகாக்கிறது.

குறிப்பாக அதிக ஒலிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது. இதைத்தான் காது அடைக்கிறது என்கிறோம்.

Tags:    

Similar News