பொது மருத்துவம்

சைவ பிரியர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய '5'

Published On 2022-11-23 07:53 GMT   |   Update On 2022-11-23 07:53 GMT
  • உலர் பழங்களை அவசியம் சாப்பிட வேண்டும்.
  • சாலட்டிலோ, சிற்றுண்டியிலோ சேர்த்து ருசிக்கலாம்.

அசைவத்தை தவிர்த்து சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள் அன்றாட உணவு பழக்கத்தில் ஐந்து விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அவை எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெறுவதற்கு வழிவகுக்கும்.

1. உலர் பழங்கள்: பெரும்பாலான உலர் பழங்களில் இரும்புதான் முக்கிய ஊட்டச்சத்தாக அமைந்திருக்கிறது. மேலும் அவற்றுள் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. எனவே உலர் பழங்களை தினமும் குறிப்பிட்ட அளவாவது அவசியம் சாப்பிட வேண்டும். சாலட்டிலோ, சிற்றுண்டியிலோ சேர்த்து ருசிக்கலாம்.

2. பச்சை இலை காய்கறிகள்: இதிலும் இரும்பு சத்து நிரம்பி இருக்கிறது. வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியமும் அதிகம் உள்ளது. கீரைகளில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

3. முழு தானியங்கள்: துத்தநாகம், நார்ச்சத்து இவை இரண்டும் முழு தானியங்களில் அதிகம் நிரம்பி இருக்கும். இவை உடலில் கொழுப்பு சேர்வதை எதிர்த்து போராடவும் உதவும். பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

4. பருப்பு: கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் இவை இரண்டும் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படும். அதுபோல் இரும்பு சத்தும் அதிகம் கொண்டிருக்கும். இவற்றை சாப்பிடுவது வாயு பிரச்சினையை உருவாக்காது.

5. பீன்ஸ்: இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் அதிகம் கொண்ட இது உடலில் கொழுப்பை எதிர்த்து போராட உதவும். அத்துடன் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் பீன்ஸ் மூலம் பெறலாம்.

Tags:    

Similar News