லைஃப்ஸ்டைல்
கிரீன் டீயில் துளசி இலையை சேர்த்து குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படும்

கிரீன் டீயில் துளசி இலையை சேர்த்து குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படும்

Published On 2020-10-07 08:53 GMT   |   Update On 2020-10-07 08:53 GMT
கிரீன் டீயில் துளசி இலையை சேர்த்து குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். அவை என்ன மாற்றங்கள் என்று அறிந்து கொள்ளலாம்
துளசி மற்றும் கிரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க பெரிதும் உதவி புரியும்.

சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் கிரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.
 
துளசி கிரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும்  குணமாக்க இது உதவும்.
 
பொதுவாக துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருப்பதனால் இதனை கிரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 
துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி கிரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.
 
கிரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்படுத்தும். கிரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.
Tags:    

Similar News