லைஃப்ஸ்டைல்
நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா?

Published On 2020-09-22 07:41 GMT   |   Update On 2020-09-22 07:41 GMT
புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது நல்லது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

டயாபெட்டீஸ் நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உண்மையில் புளித்த உணவுகளை சூப்பர் ஃபுட்கள் என்றே கூறலாம்.

ஊறுகாய், வினிகர் நிறைந்த சாஸ்கள், கொம்புச்சா, கேஃபிர் மற்றும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய இட்லி மற்றும் தோசை போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை குறைக்க புளித்த உணவுகள் எவ்வாறு உதவும் என்பதற்கு பல கூற்றுக்கள் உள்ளன. இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில் புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை அறிவோம்.

புளித்த உணவுகள் புரோபயாடிக்குகள் நிறைந்தவை மற்றும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. இது கார்போஹைட்ரேட்டுகளை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

இந்த புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது என்பது உங்கள் ஒட்டுமொத்த குடல் தாவரங்களுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் என்சைம்களைச் சேர்ப்பதாகும். மேலும் இது நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கொழுப்பு மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக கொழுப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புளித்த உணவுகளை உட்கொள்வது சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இருதய நோய்களை ஏற்படுத்தும் என்று அறியப்படும் உடலில் வசோ கன்ஸ்டிரிக்டர்களின் (இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் மருந்துகள்) செயல்பாட்டை தடுக்கிறது.

தயிர் போன்ற புரோபயாடிக்குகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், இன்சுலின் உணர்திறனைத் தூண்டவும் உதவுகின்றன, இது டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

உடல் எடை அதிகரித்தாலே நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏற ஆரம்பித்து விடும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பது என்பது நல்ல விஷயம். உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். மேலும் குறைந்த கார்ப் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புளித்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

உங்கள் குடல் பாக்டீரியாவை மேம்படுத்த ஒரு நாளைக்கு ஒரு முறை புரோபயாடிக்குகள் சாஸ் போன்ற புளித்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்கள் எடை மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள் புரோபயாடிக் உணவுகளில் நொதித்தல் செயல்முறை நடைபெறுகிறது. இதை எடுத்துக் கொள்ளும் போது புரதத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி, சி மற்றும் தாதுக்களின் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. இது நார்ச்சத்து நிறைந்ததாகவும், எளிதில் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது.

நொதித்தல் என்பது உணவைப் பாதுகாக்கும் மிகப் பழமையான முறைகளில் ஒன்றாகும். இதைத் தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். யோகார்ட் போன்ற நொதித்தல் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வகைகளில் உதவி செய்கிறது.

எனவே புளித்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டு இரத்த சர்க்கரை நோயை விரட்டுவோம்.
Tags:    

Similar News