லைஃப்ஸ்டைல்

இரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை

Published On 2019-04-03 07:54 GMT   |   Update On 2019-04-03 07:54 GMT
முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும்.
முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம், இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

பசும்பாலைவிட அதிக கால்சியம் சத்து கொண்டது, அதிக புரத சத்துகொண்டது.

கேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ கொண்டது.

கீரை மற்றும் காய்கள், ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை பட்டையோடு வெள்ளைக் கடுகு, பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்கு அரைத்து சூடாக்கி மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.

முருங்கை கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புவலி குறையும்.
Tags:    

Similar News