லைஃப்ஸ்டைல்

இரவில் தூங்குவதற்கு முன் பசித்தால் மீன் சாப்பிடலாமா?

Published On 2016-10-12 04:37 GMT   |   Update On 2016-10-12 04:37 GMT
சிலருக்கு தூங்குவதற்கு முன் திடீரென பசிக்கும். அப்படி பசிக்கும் போது என்ன சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
சில நேரங்களில் இரவு உணவு சாப்பிட்ட பிறகும் கூட தூங்குவதற்கு முன்னர் திடீரென பசி ஏற்படும். இதனால் தூக்கத்தின் நிம்மதியை இழந்து, சில சமயத்தில் நல்ல உறக்கமும் பாதிக்கும்.

இதற்கு நொறுக்குதீனிகள் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடலாமா என்ற குழப்பமும், உடல் பருமன் குறித்த கவலைகளும் பல பேர்களிடம் இருந்து வருகின்றது.

எனவே இரவில் சாப்பிட்ட பின்பும் பசி எடுக்கும் போது, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களானது, சத்துக்கள் நிறைந்ததாகவும், உடம்பிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் நிறந்த உணவுப் பொருட்களான, கார்ன் மற்றும் ஓட்ஸை ஒரு கப் எடுத்து பாலில் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட வேண்டும். இதனால் இரவில் பசி ஏற்படாமல், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற முடிகிறது. இரவில் பசி ஏற்பட்டால் ஒரு கப் தயிர் சாப்பிடலாம். தயிரில் ட்ரிப்டோஃபேன்கள் உள்ளது. எனவே இவை வயிற்றில் ஏற்படும் பசியை போக்கி, வயிறும் நிறைந்தது போல காணப்படும்.

உடம்பிற்கு ஆரோக்கியத்தை தரும் பழங்களான ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாக கலந்து சாலட் செய்து ஒரு கப் அளவு சாப்பிடலாம். இதனால் நல்ல உறக்கம் ஏற்படும். மேலும் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கிறது.

மீன்களில் கொழுப்புகள் இல்லை. அதிக அளவு புரோட்டின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே மீன் வகைகளை இரவு நேரங்களில் பசி ஏற்படும் போது சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் செய்து, நல்ல உறக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் வறுத்த மீன்களை சாப்பிடக்கூடாது. அது அஜீரணத்தை உண்டாக்கும்.

Similar News