லைஃப்ஸ்டைல்
நினைவாற்றலை மேம்படுத்தும் தியானம்

நினைவாற்றலை மேம்படுத்தும் தியானம்

Published On 2020-08-10 03:17 GMT   |   Update On 2020-08-10 03:17 GMT
தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்தால் நினைவுத்திறனும், மனநிலையும் மேம்படும். தேர்வு சமயத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களுக்கு தியானம் பலன் கொடுக்கும்.
நிறைய பேரிடம் நினைவுத்திறன் குறைபாடு இருக்கிறது. இயற்கையாகவே நினைவுத்திறனை அதிகரிப்பதற்கு சில ஆயுர்வேத நடைமுறைகள் இருக்கின்றன.

தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்தால் நினைவுத்திறனும், மனநிலையும் மேம்படும். தேர்வு சமயத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களுக்கு தியானம் பலன் கொடுக்கும்.

மூளைக்கு எளிமையான பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க செய்யலாம். வழக்கமாக வலது கைதான் அதிகமாக வேலை செய்து கொண்டிருக்கும். அதற்கு மாற்றாக இடது கையை பயன்படுத்தலாம். அதன் மூலம் மூளையின் ஆற்றல் மேம்படும்.

ரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க வேண்டும். மூளைக்கு போதுமான அளவு ரத்தம் சென்றால் நினைவாற்றல் அதிகரிக்கும். சில யோகாசனங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவும். உடற்பயிற்சியும் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும்.

கட்டுப்பாடற்ற உணவு பழக்கம் மூளை மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதனால் சரியான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிராக்கோலி, மீன்கள், பூசணி விதைகள், அக்ரூட் பருப்புகள், மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News