லைஃப்ஸ்டைல்
மூட்டு வலி, கால் வலியை குணமாக்கும் ஸ்வஸ்திகாசனம்
''ஸ்வஸ்திகா'' என்றால் வளமையான அல்லது வளம் பொருந்திய என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ''ஸ்வஸ்திகாசனம்'' எனப் பெயர் பெற்றது.
''ஸ்வஸ்திகா'' என்றால் வளமையான அல்லது வளம் பொருந்திய என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ''ஸ்வஸ்திகாசனம்'' எனப் பெயர் பெற்றது.
பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இருபாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும்.
செய்முறை :
முதலில் விரிப்பில் உட்க்கார்ந்து இரண்டுகால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள். வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும்.
கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும். முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும். 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம்.
பயன்கள் :
முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். நுரையீரல் வளம் பெரும். மனது அமைதி பெறும். தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது.
பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இருபாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும்.
செய்முறை :
முதலில் விரிப்பில் உட்க்கார்ந்து இரண்டுகால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள். வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும்.
கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும். முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும். 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம்.
பயன்கள் :
முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். நுரையீரல் வளம் பெரும். மனது அமைதி பெறும். தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது.