லைஃப்ஸ்டைல்
அர்த்த சிரசாசனம்

மாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஆசனம்

Published On 2020-01-25 03:41 GMT   |   Update On 2020-01-25 03:41 GMT
அர்த்த சிரசாசனம் மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.
விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். அதில் இருந்து எழுந்து உச்சந்தலை தரையில்படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்கலையும் கால் பெருவிரல்கள் தரையில்படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும். இந் நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.

பலன்கள்


பிட்யுட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.

சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.

இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News