லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்

Published On 2018-10-15 05:29 GMT   |   Update On 2018-10-15 05:29 GMT
தற்காலத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பிள்ளைகளின் உடல் பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய வாழ்வின் முக்கியமான அம்சமாகும். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே, (உடல் பரிசோதனையுடன்) இது போல் நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது,  நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வலுவாக வளர ஆரம்பிக்கும்.

5-17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இப்படி இரண்டிலும் 30 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.



இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 தடவை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இவர்கள், தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விளையாடுவதற்கான நேரம் கிடைக்கும்.

வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.

எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு வருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, அவர்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Tags:    

Similar News